Tuesday, October 30, 2012

இந்து சமயத்தில் வெற்றிலை முக்கியத்துவம் பெறுவது ஏன் ?

வெற்றிலை முதலில் இமையமலைப் பகுதியிலேயே உருவாகியதாகக் கூறப்படுகிறது. சிவனும் பார்வதியுமே அவற்றை அங்கு விதைத்ததாக ஒரு கதை உண்டு. அது மாத்திரமன்றி தேவர்கள் அமுதத்தை பெற வேண்டி பாற்கடலை கடைந்த வேளை அவர்களுக்கு கடவுளால் வெற்றிலை வழங்கப்பட்டதாக கந்த புராணம் கூறுகிறது.
அத்துடன் வெற்றிலையின் வெவேறு பகுதிகளில் வெவ்வேறு தெய்வங்கள் உறைவதாக ஐதிகம் உண்டு .

அவ்வகையில்..
இந்திரன், சுக்கிரன் மேல் பகுதியிலும்
சரஸ்வதி மத்திய பகுதியிலும்
மகா லக்க்ஷ்மி கீழ்ப் பகுதியிலும்
ஜேஸ்த லக்க்ஷ்மி முனைப் பகுதியிலும்
பார்வதி, மாங்கல்ய தேவி இடது பக்கத்திலும்
பூமாதேவி வலது பக்கத்திலும்
விஷ்ணு உட்புறமாகவும்
சிவன் வெளிப்புறமாகவும்
சூரியன் பரவலாகவும்
காமதேவன் வெளிப்பகுதியிலும் உறைவதாக நம்பிக்கை உண்டு.
இதனாலேயே அஷ்ட மாங்கல்ய பொருட்களில் வெற்றிலை முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஓட்டை விழுந்த , கிழிந்த மற்றும் காய்ந்த இலைகள் பூசைக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

அது மாத்திரம் அன்றி அமது இந்து மதத்தில் பயன்படுத்தப்படும் ஏனைய புண்ணியப் பொருட்களைப் போன்று வெற்றிலையும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.
அது விற்றமின் எ(A), சி(C) மற்றும் கல்சியம் நிறைந்தது. வாயை சுத்தமாக வைத்து கொள்ள உதவுவதுடன் புற்று நோய், ஒச்தியோ புரோசிஸ், சளி, இருமல் மற்றும் சமிபாட்டின்மை போன்றவற்றிற்கு சிறந்த நோய் நிவாரணி ஆகவும் விளங்குகிறது.

No comments:

Post a Comment